‘இந்திய அணி கேப்டன் பதவி’…ரோஹித்துக்கு கல்தா? தோனியின் ஜெராக்ஸிற்கு அழைப்பு! ஐபிஎல் 15ஆவது சீசனில் தொடர்ந்து ட்விஸ்ட் மேட் ட்விஸ்ட் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. யாரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 7 போட்டிகளிலும் தோற்று, கடைசி இடத்தில் நீடித்து வருகிறது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடர்ந்து சொதப்பி, 7 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. நிலைமை இப்படியிருக்க புது அணிகளான குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் பட்டையை கிளப்பி வருகின்றன. மேலும் கடந்த சீசன்களில் பிளே ஆஃப் செல்வதையே சாதனையாக வைத்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரமாக செயல்பட்டு வருகிறது. இப்படி பல அதிரடி திருப்பங்கள் ஐபிஎலில் நடைபெற்று வருவதால், இந்திய அணியில் கணிக்க முடியாத அளவுக்கு பல மாற்றங்கள் இனி நிகழும் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து நேற்றைய பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. பிசிசிஐ மீட்டிங்: அப்போது, முதலில் ஐபிஎலில் கொரோனா பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, ஐபிஎல் நிர்வாகம் தாக்...
Comments
Post a Comment