Selvaraghavan: அதை செய்து செய்து போர் அடித்துவிட்டது என்ற செல்வராகவன்..ஷாக்கான ரசிகர்கள்..!


Selvaraghavan: அதை செய்து செய்து போர் அடித்துவிட்டது என்ற செல்வராகவன்..ஷாக்கான ரசிகர்கள்..!


துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமானார் செல்வராகவன்.செல்வராகவன்கதை எழுத, கஸ்தூரி ராஜா அப்படத்தை இயக்க,தனுஷ்நாயகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தனுஷின் இரண்டாவது படம் மூலம் இயக்குனரானார் செல்வராகவன்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான செல்வராகவன் தன் முதல் படத்திலேயே தனி முத்திரையை பதித்தார். அப்படத்தின் மூலம் தனுஷின் திரைவாழ்க்கையிலும் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது.

Vijay :தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் நலத்திட்ட உதவிகள்...குவியும் பாராட்டுக்கள்..!

அதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கினார். இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் -2வுக்கு பிட்டு போட்ட நெல்சன்; தயரான விஜய்!


இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்
இந்நிலையில் தற்போது செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி பல ஆண்டுகளுக்கு பின்நானே வருவேன்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவருகிறது.
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தற்போது செல்வராகவன் அவதாரம் எடுத்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்..

விஜய்யுடன் பீஸ்ட் மற்றும் சாணிகாகிதம் போன்ற படங்களில் நடித்து நடிகராகவும் வெற்றிகண்டு வருகின்றார். இந்நிலையில் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கி போர் அடித்துவிட்டதாகவும், மீண்டும் காதல் படத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாகவும் செல்வராகவன் தெரிவித்திருந்தார்.

புதுப்பேட்டை படத்தை போலவே நானே வருவேன் திரைப்படமும் GANGSTER கதைக்களத்தில் உருவாகி இருக்கின்றதாம். எனவே GANGSTER கதையை இயக்கி போர் அடித்துவிட்டதாகவும் விரைவில் காதல் கொண்டேன், 7G போன்ற காதல் படங்களை இயக்கவுள்ளதாகவும் செல்வராகவன் தெரிவித்தார். இதனை கேட்ட செல்வராகவனின் GANGSTER பட ரசிகர்கள் சற்று ஷாக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog